குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-06-30 13:59 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பொழிச்சலூர் சிவன்கோவில் பஸ் நிறுத்தம் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ் ஏறவரும் பயணிகளுக்கு நோய் தொற்று வரும் அபாயம் உள்ளது. எனவே, பஸ் நிறுத்தம் அருகில் குப்பை தொட்டி வைக்கவும், தற்போது உள்ள குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்