ஏரியில் எரிக்கப்படும் குப்பைகள்

Update: 2024-06-23 17:53 GMT
ரிஷிவந்தியம் ஊராட்சி ஈருடையாம்பட்டு கிராமத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்குள்ள ஏரியில் கொட்டப்பட்டு அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிப்பதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், சுவாச பிரச்சினை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே ஏரியில் குப்பைகள் கொட்டி தீ வைத்து எரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்