சுகாதார சீர்கேடு

Update: 2024-06-23 08:43 GMT

முன்சிறை ஊராட்சி ஒன்றியம் மெதுக்கும்மல் ஊராட்சிக்கு உட்பட்ட கோழிவிளையில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் எதிர்புறம் உள்ள இடத்தில் சிலர் கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பள்ளியின் அருகில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்