நடைபாதையில் குப்பைகள்

Update: 2024-06-16 17:20 GMT

நாமக்கல்-திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. வகுரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே பேவர்பிளாக் கற்கள் பதித்த இந்த நடைபாதையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்