சுகாதார சீர்கேடு

Update: 2024-06-16 07:07 GMT

தெற்குதாமரைகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புன்னையடியில் ஒரு அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த 30 குழந்தைகள் படித்து வருகிறார்கள். இந்த மையத்தின் அருகில் சிலர் வீடுகளில் உள்ள கழிவுகள், குப்பைகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, அங்கன்வாடி மையம் அருகில் குப்பை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபு, புன்னையடி.

மேலும் செய்திகள்