குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-06-09 10:36 GMT

சென்னை அமைந்தக்கரை, வெள்ளாளர் தெருவில் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த தெருவில் மாநகராட்சி குப்பை தொட்டி இல்லாததால் பொதுமக்கள் குப்பைகளை சாலையில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சாலையில் குப்பைகள் கொட்டுவதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும் உள்ளது. எனவே, இங்குள்ள குப்பைகளை அகற்றவும், குப்பை தொட்டி அமைத்து தரவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்