சுகாதார சீர்கேடு

Update: 2024-06-02 10:15 GMT

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செல்வபுரத்தில் உள்ள ராஜேஸ்வரி நகரில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகளை முறையாக அகற்றுவது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு குப்பைகளை முறையாக அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்