அள்ளப்படாத குப்பைகள்

Update: 2024-05-26 17:57 GMT
சிவகிரிப்பட்டி ஊராட்சி வள்ளிநகர் பகுதியில் பல நாட்களாக குப்பைகள் அள்ளுவதில்லை. இதனால் அங்கு மலைபோல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் இந்த குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவி சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை உடனடியாக அள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்