சுகாதார சீர்கேடு

Update: 2024-05-26 17:44 GMT

தாரமங்கலம் நகராட்சி பஸ் நிலையம் அருகில் பவளத்தானூர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆங்காங்கே இறைச்சி, மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கொட்டப்படும் கழிவுகளையும், குப்பைகளையும் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதிகாரிகள் அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

-சசிகுமார், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்