குப்பைகளை எரிப்பதால் அவதி

Update: 2024-05-05 18:01 GMT
கடலூர் அருகே எம்.புதூர்-குறிஞ்சிநகர் செல்லும் பிரதான சாலையில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் மர்ம நபா்கள் அந்த குப்பைகளை அடிக்கடி தீ வைத்து எரிப்பதால் அப்பகுதியே புகை மண்டலமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்