குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-05-05 18:00 GMT
விழுப்புரம் வழுதரெட்டி-எல்லீஸ்சத்திரம் சாலையில் ஸ்ரீராம் நகர் மற்றும் கவுதம் நகர் சுமார் 500 குடியிருப்புகளுடன் அமைந்துள்ளது. இவ்விரண்டு பொிய நகர்களில் குப்பைகளை சேகரித்து அகற்ற ஒரே ஒரு தூய்மைப்பணியாளர் மட்டுமே உள்ளார். இதனால் குப்பை சேகரிப்பில் கால தாமதம் ஏற்படுவது மட்டுமின்றி பலர் குப்பைகளை வீதியிலேயே கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி அதிகாரிகள் உடனடியாக கூடுதல் பணியாளர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்