போக்குவரத்து பாதிப்பு

Update: 2024-05-05 17:56 GMT
சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சில பஸ்கள் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதால் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும் பஸ்கள் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க பஸ் நிலையத்திற்கு வெளியே பஸ்கள் நிற்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்