குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-05-05 12:48 GMT

கோவை மத்வராயபுரம் ஊராட்சி சிறுவாணி மெயின்ரோடு நல்லூர்வயல், செரும்பு பள்ளம் ஈடன் கார்டன் பிரிவு, நல்லூர்பதி ஆகிய இடங்களில் குப்பைகள் கொட்டக்கூடாது என்று போர்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதன் அருகிலேயே குப்பைகளை கொட்டி விட்டு செல்கிறார்கள். இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடப்பதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு அந்த வழியாக செல்வோருக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே அங்குள்ள குப்பைகளை அகற்றுவதோடு மீண்டும் கொட்டாமல் தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்