சுகாதாரக்கேடு

Update: 2024-05-05 11:58 GMT

நெல்லையை அடுத்த பேட்டை ரூரல் பஞ்சாயத்து கோடீஸ்வரன்நகர் முதல் பிரதான சாலையில் 6-வது குறுக்கு தெரு அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அது காற்றில் பறந்து சாலையிலும் சிதறி கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து தினமும் குப்பைகளை முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்