குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2024-05-05 11:48 GMT
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகிறது. இந்த பன்றிகள் அப்பகுதியில் உள்ள குப்பைகளை கிளறி வருகிறது. இதனால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சில நேரங்களில் வீடுகளுக்குள்ளேயும் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்