நோய் பரவும் அபாயம்

Update: 2024-05-05 11:20 GMT
அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மலைக்கோவிலூர் அருகே சீத்தப்பட்டி காலனி உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊருக்கு அருகிலேயே சாலையோரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அதிக அளவு குப்பைகள் குவித்து வைக்கப்படுகிறது. மேலும், கோழி கழிவுகளையும் வாகனங்களில் வந்து கொடி செல்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்