குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-03-31 10:26 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் ஊராட்சியில் கூடுவாஞ்சேரி செல்லும் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதேபோல் குத்தனூர், வள்ளலார் நகர் செல்லும் சாலை ஓரத்தில் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் சாலையோரங்களில் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் அதிகமாக உற்பத்தாகி பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. எனவே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்