நோய் பரவும் அபாயம்

Update: 2024-03-24 13:11 GMT

சூலூர் அருகே கண்ணம்பாளையம் ரூபி அவென்யூ பேஸ்-2 பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பூங்கா இடத்தில் குப்பைகளை கொட்டி குவித்து வைத்துள்ளனர். இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு குப்பைகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்