குப்பை அகற்றப்படுமா?

Update: 2024-03-24 11:08 GMT

சென்னை கீழ்ப்பாக்கம், 108-வது வார்டு தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை அலுவலகம் செல்லும் சாலையில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அந்த பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குப்பையை அகற்றவும், மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்