குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2024-03-17 17:00 GMT
வேடசந்தூர் அருகே தட்டாரப்பட்டி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வேடசந்தூர்-மாரம்பாடி சாலையோரம் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து சாலைக்கு வருவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, மீண்டும் குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்