குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-03-17 12:13 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சியில் அக்னி ஆற்றின் அருகே பொது மயான கொட்டகை உள்ளது. அனைத்து சமூக மக்களுக்குமான இந்த மயானத்தை சுற்றி பேரூராட்சி குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் இந்த மயானத்தில் இறந்தவர்களின் உடலை குப்பை கழிவுகளுக்கு மத்தியில் தகனம் செய்யும் நிலை உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் மயான பகுதிக்கு சென்றாலே சுகாதார கேடு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. இந்த மயானத்தில் முறையான சாலை மற்றும் தண்ணீர் வசதியும் இல்லை. எனவே இந்த மயானத்தை மேம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்