குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-03-03 14:42 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், திருக்காலிமேட்டிலில் இருந்து பெருமாள் கோவில் செல்லும் பாதையில் குப்பைகள் மலைபோல் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பயங்கர துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதி வழியாக செல்பவர்கள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்