சுகாதார சீர்கேடு

Update: 2024-02-25 07:39 GMT

நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள்புரம் உள்ளது. இந்த பகுதியில் நூலகத்தின் அருகில் டிரான்ஸ்பார்மரும், பெரிய பள்ளம் காணப்படுகிறது. இந்த பகுதியை சேர்ந்த சிலர் குப்பைகளை கொண்டு வந்து அந்த பள்ளத்தில் கொட்டிவிட்டு செல்வதுடன், தீவைத்து எரிக்கின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், பள்ளத்தை மணலிட்டு மூடுவதுடன், அங்கு எச்சரிக்கை பதாகைகள் வைத்து குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்