குப்பைகளுக்கு தீ வைப்பதால் அவதி

Update: 2024-02-11 17:38 GMT
பண்ருட்டி அடுத்துள்ள தொரப்பாடி பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அடிக்கடி புதுநகர் பகுதியில் குவித்து தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காணப்படுவதால் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதால் அவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளுக்கு தீ வைத்து எரிக்காமல் அதனை முறையாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்