குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-02-11 10:56 GMT


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் அமைந்துள்ள திருநாங்கூர் பெருமாள் கோவில் குளம் அருகே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் குப்பைகள் தேங்கி கிடப்பதை பார்த்து மன வேதனை அடைகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், சீர்காழி

மேலும் செய்திகள்