சுகாதார சீர்கேடு

Update: 2024-02-11 08:23 GMT

கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆவன்கோட்டை பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியை சுற்றிலும் செடிகொடிகள் வளர்ந்து புதர்போல காட்சி அளிக்கிறது. மேலும், அந்த பகுதியை சேர்ந்த சிலர் நீர்தேக்கத்தொட்டியின் அருகில் குப்பைகளை வீசி செல்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை பலகையை வைத்த பிறகும் சிலர் குப்பைகளை அங்கு வீசி செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, அந்த பகுதியில் வளர்ந்துள்ள ெசடிகளை அகற்றுவதுடன், குப்பைகளை வீசுபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், கணபதிபுரம்.

மேலும் செய்திகள்