குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்

Update: 2024-01-28 15:43 GMT

தர்மபுரி நகர பகுதியில் அமைந்துள்ள பிடமனேரி ஏரியின் வடக்கு கரையையொட்டி தார்ச்சாலை செல்கிறது. இந்த சாலை, தர்மபுரி நகரையும் தர்மபுரி- சேலம் 4 வழி பைபாஸ் சாலையையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏரிக்கரை பகுதியில் சாலையோரத்தில் தினமும் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே ஏரிக்கரையோர பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், இந்த பகுதியில் சுகாதாரத்தை முறையாக பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்