குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-01-28 14:02 GMT

தஞ்சை ராசாமிராசுதார் ஆஸ்பத்திரியின் பின்புறத்தில் குப்பைகள்,பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சிகிக்சைக்காக வருபவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளில் இரை தேடி நாய்கள், கால்நடைகளும் அதிகளவில் வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்