இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-01-21 17:07 GMT

சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட காடையம்பட்டி ஏரி பகுதிகளில் சாலையோரம் இறைச்சி மற்றும் குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அந்த வழியாக செல்பவா்கள் மூக்கை பிடித்து கொண்டு தான் செல்கிறார்கள். எனவே இந்த இறைச்சி கழிவுகளை உடனடியாக அகற்றவும், கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்