சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-01-21 15:34 GMT
விழுப்புரம்- செஞ்சி சாலையில் பாப்பான்குளம் பகுதியில் சாலையோரமாக குப்பைகள் மற்றும் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால் தினந்தோறும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகத்தினர் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்