சுகாதார சீர்கேடு

Update: 2024-01-21 08:56 GMT

செண்பகராமன்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கங்கை பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் குப்பைகளை கொட்டி தீவைத்து எரிக்கின்றனர். இதனால், அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்படுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியை சேர்ந்த சிறு குழந்தைகள், முதியவர்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு குப்பைகளை கொட்டுவதையும், தீவைத்து எரிப்பதையும் தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்