குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-01-14 17:16 GMT
கடலூர் முதுநகரில் எந்தவொரு தெரு பகுதிகளுக்கு சென்றாலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும், குப்பைகளை தினசரி அள்ளிச் செல்ல எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன்கருதி குவிந்து கிடக்கும் குப்பைகளை முறையாக அள்ளுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்