குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-01-14 14:45 GMT

கரூர் கோவை சாலை விசாகா நகர் செல்லும் பகுதியில் சாலை ஓரத்தில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த குப்பைகளை அகற்றினாலும் திரும்பத் திரும்ப இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யும்போது இந்த குப்பைகளில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்