குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2024-01-14 13:30 GMT

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 38-வது வார்டு பொம்மனம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதி பெருமாள் கோவில் பக்கத்தில் ஒரு குப்பை தொட்டி உள்ளது. இந்த குப்பை தொட்டியில் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் குப்பை தொட்டி அருகே கழிவுகளை வீசி செல்வதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கால்நடைகள் குப்பை கழிவுகளை சாலையில் இழுத்து போட்டு செல்கின்றன. இதனால் குப்பை தொட்டியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்