குப்பை அகற்றப்படுமா?

Update: 2024-01-14 11:55 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், ஐயப்பந்தாங்கல் - பெரியகொளுத்துவாஞ்சேரி சாலையில் (முத்துகுமாரன் முருகன் கோயில்) அருகில் உள்ள நிலத்தில் குப்பை கொட்டப்படுகிறது. இதுகுறித்து பலமுறை பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து குப்பையை கொட்டுவதால் அப்பகுதி குப்பை கிடங்காக காட்சியளிக்கிறது . இதனால் அந்த பகுதியில் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பையை அகற்றவும், குப்பையை கொட்டுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்