குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-01-07 12:09 GMT

திருவள்ளூர் மாவட்டம், வெங்கத்தூர் கிராமம் பேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியாக செல்லும் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. மேலும் மாடுகள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த குப்பையில் உள்ள கழிவுகளை மேய்கிறது. இதனால் சாலைகளில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்