சுகாதார சீர்கேடு

Update: 2023-12-31 09:41 GMT

திருப்பூர் நல்லூர் அரசு மருத்துவமனை பின்புறம் மாநகராட்சி வாகனங்கள், ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அங்கு நிறுத்தப்பட்டுள்ள செப்டிக் டேங்க் வாகனத்தில் இருந்து நீர் கசிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்ட வருகிறார்கள். அத்துடன் சுகாதார சீர்கேடு காரணமாக நோய் பரவும் அபாயமும் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


மேலும் செய்திகள்