குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2023-12-24 14:10 GMT
கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்குச்சாலை பகுதிகளில் ஓட்டல்கள் ,பலகார கடைகள், பேக்கரிகள், டீக்கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், துணிக்கடைகள் , மாமிச கடைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகாரமாகும் குப்பைகள் கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையின் ஓரத்திலும் குவித்து வைத்துள்ளனர். அதேபோல் சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் இருந்தும் மருத்துவக் கழிவுகளை மூட்டையாக கட்டிக் கொண்டு கொட்டிகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்