குப்பை கூளமாக மாறிய பஸ் நிறுத்தம்

Update: 2023-12-10 15:47 GMT

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கருங்காலக்குடியில் பஸ் நிறுத்தம்  உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் முன்பு குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.இதனால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் பஸ் நிறுத்தம் காணப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் சாலையில் நின்று பயணிக்கும் நிலை உள்ளது. எனவே பஸ் நிறுத்தத்தில் குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு பஸ் நிறுத்தத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்