குடியிருப்பு பகுதியில் தேங்கும் மழைநீர்

Update: 2023-12-03 10:11 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த நோட்சியூர் ஊராட்சி சித்தமல்லி கிராமம் மேலதெருவில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தேங்கி கிடக்கும் மழைநீரில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்