குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-11-26 13:39 GMT

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி வெண்ணெய்மலையிலிருந்து வாங்கல் செல்லும் சாலையின் ஓரத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் வாகனங்கள் செல்லும்போது காற்றில் பறப்பதினால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்