குப்பையால் சுகாதார சீர்கேடு

Update: 2023-11-05 16:00 GMT

குப்பையால் சுகாதார சீர்கேடு

திருப்பூர் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் வளாகத்தில் காய்கறி மார்க்கெட்டில் சேகரமாகும் காய்கறி கழிவுகள் அங்குள்ள சுகாதார வளாகத்தின் அருகில் கொட்டப்பட்டு வருகின்றன. இவை முறையாக அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால் இப்பகுதியில் குப்பை நிரம்பி வழிகிறது. இதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீச தொடங்கி விடுகிறது. இதனால் மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்களும், வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளும் துர்நாற்றத்தால் சிரமப்படுகின்றனர். இதேபோல் இந்த கழிவுகளிலிருந்து வடியும் கழிவு நீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மார்க்கெட்டில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?.

===========

குமார்,திருப்பூர்.

87667 23735

மேலும் செய்திகள்