கடும் துர்நாற்றம்

Update: 2023-11-05 11:14 GMT

கோவை மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட காந்தி மாநகர் பகுதியில் சாலையோரம் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் சரிவர அகற்றப்படுவது இல்லை. இதனால் தொட்டிகளில் குப்பைகள் அடிக்கடி நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக குப்பைகளை சாலையோரம் கொட்ட வேண்டிய நிலை உள்ளது. இதனால் அப்பகுதி குப்பை மேடாக காட்சியளிக்கிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்