சுகாதார சீர்கேடு

Update: 2023-10-29 10:18 GMT

கோவை ஆர்.எஸ்.புரம் புரூக்பாண்ட் சாலை ரங்கசாமி வீதியில் கடந்த சில நாட்களாக குப்பைகள் முறையாக அகற்றப்படுவது இல்லை. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து மலைபோல் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்