குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-10-29 10:15 GMT

கோவை மாநகராட்சி 53-வது வார்டு கஸ்தூரிபாய் காந்தி நகர், இந்திரா நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் இருந்து அங்குள்ள ஒரு தனியார் பள்ளி அருகில் குப்பை கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளை முறையாக அகற்றுவது இல்லை. இதன் காரணமாக நீண்ட நாட்களாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் ெதாற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்