சுகாதார சீர்கேடு

Update: 2023-10-22 10:01 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரி பஸ் நிலையத்தின் பின்புறம் வடக்குபட்டக்கால் செல்லும் சாலையோரத்தில் கைப்பம்பு ஒன்று உள்ளது. இந்த கைப்பம்பின் அருகே குப்பைகள் மற்றும் உணவுப்பொருட்களை கொட்டிச்செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளால் கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குப்பைகள், உணவுபொருட்கள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்