குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-10-15 14:17 GMT

சென்னை திருவல்லிக்கேணி, பழனியம்மன் கோவில் 6-வது தெருவின் அருகில் உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. ஒரு மாதத்திற்கு மேலாகியும் குப்பையை அகற்றவில்லை. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. உடனடியாக குப்பை கழிவுகளை அகற்றி, மீண்டும் குப்பை கொட்டாமல் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்