சுகாதார சீர்கேடு

Update: 2023-10-04 12:15 GMT

கோவை டவுன்ஹால் அருகே பேரூர் சாலைக்கு செல்லும் வழியில் வைசியாள் வீதி குரங்கு சேட் அரசு மருத்துவமனை எதிரே உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. மேலும் அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே அங்கு கழிவுநீர் வழிந்தோடுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்