குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-10-01 16:15 GMT

தர்மபுரி குமாரசாமிபேட்டை மேம்பாலம் அருகே உள்ள சத்யா நகர் வழியாக செல்லும் தார்சாலை எம்.ஜி.ஆர். நகர், பிடமனேரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலையுடன் இணைகிறது. இந்த சாலையை ஒட்டி உள்ள மயானத்தின் அருகே குப்பைகள், கழிவு பொருட்கள் அதிக அளவில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்