சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-10-01 11:28 GMT

அரியலூர்-செந்துறை சாலை காமராஜ் நகரில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் இங்கு குப்பைகள் மலைபோல் குவிந்து காட்சியளிக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் இந்த குப்பைகளை சாலையில் செல்லும் கால்நடைகள் மற்றும் நாய்கள் கிளறிச்செல்கின்றன. இதனால் குப்பைகள் சாலையில் பறக்கின்றன. நாய்கள் சாலையின் குறுக்கே ஓடுவதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்